சென்னை: மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவகர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: மூத்த பத்திரிகையாளரும், பொதுவுடைமை சிந்தனையாளருமான இரா.ஜவகர் மறைவுற்ற செய்தியறிந்து பெரிதும் வேதனை அடைந்தேன். அவரது மறைவு முற்போக்கு சிந்தனை உலகிற்கு பேரிழப்பாகும். இளம் பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த இரா.ஜவகர், அரிய நூல்களை படைத்தளித்தவர் என்பதுடன், கலைஞர் மீது மிகுந்த மரியாதையும், மாறாத பற்றும் கொண்டவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பத்திரிகையாளர்கள், பொதுவுடைமை இயக்க தோழர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.